தலைநகர் தில்லியில் ஏற்பட்ட புழுதிப்புயலால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடும் வெயில் நிலவி வந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென புழுதிப் புயல் வீசியது. இதனால் இந்திராகாந்தி விமானநிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சில இடங்களில் லேசான மழைத்தூறலும் விழுந்தது. இதன் காரணமாக மாலையில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசில் இருந்து 33 டிகிரி செல்சியசாக குறைந்தது என்று தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமெட் தெரிவித்தது.
கடந்த திங்கட்கிழமை தில்லியில் இதுவரை இல்லாதவகையில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.